காதலிக்க மறுத்த பெண் கத்தியால் குத்திக்கொலை - பொள்ளாச்சி இளைஞருக்கு ஆயுள் தண்டனை

காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காதலிக்க மறுத்த பெண் கத்தியால் குத்திக்கொலை - பொள்ளாச்சி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
x
பொள்ளாச்சியை சேர்ந்த தங்கதுரை, அதே பகுதியை சேர்ந்த பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து, திருமணத்திற்கு வற்புறுத்தி மறுத்தால், கடந்த 2014 இல், வீடு புகுந்து, கத்தியால் குத்திக்கொலை செய்தார். மேலும், தடுக்க முயன்ற பெண்ணின் தாயார் மற்றும் சகோதரரையும் கத்தியால் குத்தியதில், இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, தங்கதுரை சிறைக்கு சென்ற நிலையில், வழக்கின் விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்நிலையில், தங்கதுரைக்கு கொலை மற்றும் கொலை முயற்சிக்காக  தலா 7 ஆண்டுகள் சிறையும், கொலை செய்யும் நோக்கத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்கு 10 ஆண்டும் ஏக காலத்தில் அனுபவிக்க, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்