ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவியின் கணவர் டிக்-டாக் பதிவு - சமூக வளைதளங்களில் பரவி வரும் டிக் டாக் வீடியோ

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் அத்துமீறி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிக்-டாக் செய்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவியின் கணவர் டிக்-டாக் பதிவு - சமூக வளைதளங்களில் பரவி வரும் டிக் டாக் வீடியோ
x
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், அத்துமீறி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிக்-டாக் செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவி செல்வி என்பவரின் கணவர் ரமேஷ், ஊராட்சி மன்றத்தில் அரசு அலுவலகத்தில் அத்துமீறி, தலைவரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு டிக்-டாக் செய்துள்ளார். இந்தகாட்சி சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்