"சிறப்பு வேளாண் மண்டலங்கள்", முதலமைச்சரின் அறிவிப்பு - மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்ததை அடுத்து திருவாரூரில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததை அடுத்து திருவாரூரில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். சிறப்பு வேளாண் மண்டலங்களுக்கு தனி சட்டம் அமைப்பதற்கு குழு அமைக்கப்படும் என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டம் அனுமதிக்கப்படாது என்றும் முதலமைச்சர் அறிவித்திருப்பதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Next Story