நாமக்கல் : முட்டை விலையை அரசே நிர்ணயம் செய்ய கோரிக்கை
முட்டை விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ் நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சமேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
முட்டை விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ் நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சமேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. நாமக்கல்லில் அவசர ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகுமுட்டை மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் சுப்பிரமணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நெல், கரும்பு போல் உற்பத்தி செலவின் அடிப்படையில் முட்டை விலையை அரசு நிர்ணயம் செய்ய முன் வந்தால் அதனை வரவேற்போம் என்று தெரிவித்தார். முட்டை விலை நிர்ணயம் செய்ய தேசிய முட்டை விலை ஒருங்கிணைப்பு குழு தேவை என்றும் அவர் கூறினார்.
Next Story