நயினார் முகமதுவிடம் வரி வசூலிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை

அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரில் பெறப்பட்ட வருமான வரிச் சோதனை உத்தரவு அடிப்படையில், நயினார் முகமது என்பவருக்கு விதிக்கப்பட்ட 2 கோடியே 12 லட்சம் ரூபாய் வரியை வசூலிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நயினார் முகமதுவிடம் வரி வசூலிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை
x
கடந்த 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது,  அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கான சோதனை உத்தரவின் அடிப்படையில், சுகாதார துறைக்கு எழுதுபொருட்கள் சப்ளை செய்யும், ராயப்பேட்டை எழுதுபொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினரான நயினார் முகமது என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது, அவரது வீட்டில் இருந்து,  3 கோடியே 3 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகையையும், வருமானமாக அவர் காட்டிய ஒரு கோடியே 49 லட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபாயையும் சேர்த்து, 2018 - 19ம் நிதியாண்டுக்கு 4 கோடியே 52 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் என தீர்மானித்த வருமான வரித்துறை, இதற்கு 2 கோடியே 12 லட்சத்து 19 ஆயிரத்து 862 ரூபாய் வரி நிர்ணயித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நயினார் முகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நயினார் முகமதுவிடம் இருந்து வரி வசூலிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பிப்ரவரி 24ம் தேதிக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்