மருத்துவமனையை சூறையாடிய மர்ம கும்பல் - 14 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் விஷம் குடித்துவிட்டதாக கார்த்தி என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் விஷம் குடித்துவிட்டதாக, கார்த்தி என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை காண வந்த 14 பேர் கொண்ட கும்பல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தடுக்க முயன்ற மருத்துவர்களை அவர்கள் தாக்கியதுடன், அங்கிருந்த பொருட்களையும் சூறையாடினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 14 பேரையும் தேடி வருகின்றனர்.
Next Story