சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாத போலீசார்

சிவகாசி சிறுமி பாலியல் வன்முறை கொலை குற்றவாளியை, ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாத போலீசார்
x
சிவகாசி சிறுமி பாலியல் வன்முறை கொலை குற்றவாளியை,  ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தாத சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 21 ஆம் தேதி சிவகாசியை சேர்ந்த சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் குற்றவாளி மோஜாம் அலி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்காக மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், குற்றவாளியின் உடல்நிலையை காரணம் காட்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மோஜம் அலியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story

மேலும் செய்திகள்