பழனி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா - தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

பழனி முருகன் கோவில், தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பழனி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா - தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
x
பழனி முருகன் கோவில், தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருக்கல்யாணம் ஏழாம் தேதியும், தேரோட்டம் எட்டாம் தேதியும் நடைபெற உள்ளதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் சிறப்பு பேருந்துகள், வந்து செல்ல தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்காலிக பேருந்து நிலையம், நாளை முதல் மூன்று நாட்களுக்கு செயல்பட உள்ளதாகவும், பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது‌.

Next Story

மேலும் செய்திகள்