"காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட அருணுக்கு எந்த அபாய அறிகுறியும் இல்லை" - அரசு மருத்துவமனை டீன் வனிதா

காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட அருணுக்கு எந்த அபாய அறிகுறியும் இல்லை என்று திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
x
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை திருச்சிக்கு விமானம் மூலம் வந்த மதுரை மேலூர் அருகே உள்ள மணமேல்பட்டியை சேர்ந்த அருண் என்ற இளைஞருக்கும் கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட அருணுக்கு எந்த அபாய அறிகுறியும் இல்லை என்று திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்