காயல்பட்டு ஊராட்சியில் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் குளறுபடி? - வட்டார வளர்ச்சி அலுவலர் மீது குற்றச்சாட்டு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காயல்பட்டு ஊராட்சியில் எழிலரசி என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காயல்பட்டு ஊராட்சியில் எழிலரசி என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் நாராயணன், பவிதா ஆகிியோர் போட்டியிட்டனர். இருவருக்கும் சமமான வாக்குகள் கிடைத்ததால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க தேர்தல் அதிகாரி சதீஷ்குமார் அறிவித்தார். இதில் நாராயணன் தேர்வானதற்கு எதிர்தரப்பினர் அதிருப்தி தெரிவித்தனர். இதில் குளறுபடி நடந்ததாகக் கூறி, தேர்தல் அதிகாரி மீது குற்றம்சாட்டினர்.
Next Story