கல்லூரி வளாகத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்துக்கு திருச்சி தனியார் கல்லூரி வளாகத்தை ஒதுக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்துக்கு, திருச்சி தனியார் கல்லூரி வளாகத்தை ஒதுக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, நிதித்துறையை எதிர்மனுதாரராக சேர்த்த உயர்நீதிமன்றம், பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, உத்தரவிட்டுள்ளது. எனவே, தடை கோரிய மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காததால், நாளை நடைபெற உள்ள திமுக கூட்டத்துக்கு, தடை ஏதும் இல்லை என தெரிகிறது.
Next Story