"குரூப்-2 ஏ, குரூப்-1, பொறியியல் தேர்வுகள்" - முறைகேடுகள் நடந்ததா? என விசாரணை

டி.என்.பி.எஸ்.சி.யின் மற்ற தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதா? என்பது குறித்த தேர்வாணையத்தின் விசாரணை முறையல்ல என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குரூப்-2 ஏ, குரூப்-1, பொறியியல் தேர்வுகள் - முறைகேடுகள் நடந்ததா? என விசாரணை
x
குரூப்-4 முறைகேடு எதிரொலியாக, குரூப்-1, குரூப்- 2 ஏ, ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுகளில் முறைகேடு நடந்ததா என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்வாணையத்தின் இந்த விசாரணையை தேர்வர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்வின் போது, உரிய கண்காணிப்பை மேற்கொள்ளாமல், பணி நியமனம் வழங்கிய பிறகு விசாரணை நடத்துவது சரியா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வெறும் கண் துடைப்பிற்காக விசாரணை நடத்தப்படுகிறதா எனவும் தேர்வர்கள் விமர்சித்துள்ளனர். மொத்தத்தில், தும்பை விட்டுவிட்டு, வாலை பிடிக்கும் கதையாக, தேர்வாணையத்தின் செயல்பாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்