டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு? - 6 மையங்களில் இருந்து 37 பேர் தேர்வானதில் சர்ச்சை

2017ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
x
2017ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய ஆறு மையங்களில் இருந்து 37 பேர், குரூப்-2 தேர்வு மூலம் தேர்வாகியுள்ளனர். மேலும் குரூப்-4 தேர்வு முறைகேட்டில் கைதாகியுள்ள திருக்குமரனும் இந்த மையத்தில் இருந்து தான் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்த தேர்வு ஆணையம் முன்வருமா என கேள்வி எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்