மாவோயிஸ்ட் மணிவாசகரின் மைத்துனர் கைது - சேலம் அருகே போலீசார் அதிரடி நடவடிக்கை

கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகரின் மைத்துனரை சேலத்தில் போலீசார் கைது செய்தனர்.
மாவோயிஸ்ட் மணிவாசகரின் மைத்துனர் கைது - சேலம் அருகே போலீசார் அதிரடி நடவடிக்கை
x
கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகரின் மைத்துனரை சேலத்தில் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்தவர் மணிவாசகம். மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன் கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சூழலில் இவரது இறுதிச்சடங்கின் போது அரசுக்கு எதிராக அவரது உறவினர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரிகள் சந்திரா மற்றும் லட்சுமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார் மணிவாசகத்தின் மைத்துனரான சாலிவாகனனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்