106 வயதிலும் தொடர்ந்து வாக்களிக்கும் முதியவர் - பொன்னாடை போர்த்தி சார் ஆட்சியர் கௌரவம்
வாக்காளர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பெருமுளை கிராமத்தில், 106 வயதான சின்னபையன் என்பவரை சார் ஆட்சியர் கௌரவித்தார்
வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் பெருமுளை கிராமத்தில், 106 வயதான சின்னபையன் என்பவரை சார் ஆட்சியர் கௌரவித்தார். 106 வயதிலும் தொடர்ந்து வாக்களித்து வரும் அவரை, அவரது வீட்டிற்கு சென்று பொன்னாடை போர்த்தி சார் ஆட்சியர் பிரவீன் குமார் கௌரவித்தார். தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு பழங்கள் உள்ளிட்டவை வைத்து அவருக்கு வழங்கப்பட்டன.
Next Story

