குரூப் 4 தேர்வு முறைகேடு : ஒருவர் கூட தப்ப முடியாது - டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த அதிகாரியாக இருந்தாலும், பணியாளர்களாக இருந்தாலும், ஒருவரும் தப்ப முடியாது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வு முறைகேடு : ஒருவர் கூட தப்ப முடியாது - டிஎன்பிஎஸ்சி
x
குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்த 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்து இன்று காலை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விவகாரத்தில், தேர்வர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்ற ஆதங்கம் தேர்வர்கள் மத்தியில் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, தேர்வு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது  காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், காவல் துறைக்கு தேவையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதால், விரைவில் விசாரணையை அவர்கள் தொடங்குவார்கள் என தெரிவித்தனர். மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவரும் தப்ப முடியாது என்றும், அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் திட்டவட்டமாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்