அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் சோழவந்தானை சேர்ந்த, காளை உரிமையாளர் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்தார்.
x
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் சோழவந்தானை சேர்ந்த, காளை உரிமையாளர் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்தார். காளைகளை நிறுத்தும் இடத்தில், மற்றொருவரின் காளை முட்டியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் பிரபாகரன் என்ற மாடுபிடி வீரர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காரை பரிசாக வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்