அடுக்குமாடி குடியிருப்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கிராமிய பொங்கல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்
x
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கிராமிய பொங்கல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு வசிப்பவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். சந்தை கடைகள் அமைத்து சர்பத், குச்சி ஐஸ், எலந்தைபழம், சோளம், பனங்கிழங்கு, கம்பங்கூழ் உள்ளிட்டவை விற்கப்பட்டன. அவற்றை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி உண்டு மகிழ்ந்தனர். ராட்டினம், மாட்டுவண்டி பயணம், கிளி ஜோசியம் என கிராமத்தில் நுழைந்தது போன்று ஏற்பாடுகள் செய்து பொங்கல் விழாவை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்

Next Story

மேலும் செய்திகள்