அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ​சிறந்த காளையாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளரின் காளை தேர்வு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ​சிறந்த காளையாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளரின் காளை தேர்வு
x
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவினர் நடத்தினர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள் மூலமாக போட்டி கண்காணிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றுகளாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளில், வீரர்களிடம் பிடிபடாமல் போக்கு காட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, புதுக்கோட்டையை சேர்ந்த காவல் ஆய்வாளர் அனுராதா என்பவருக்கு சொந்தமான புருஷோத்தமன் என்ற காளை முதல் பரிசை பெற்றது. அதன் உரிமையாளருக்கு இருசக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்