நடராஜர், பஞ்சலோக அம்மன் உள்பட 9 சிலைகள் பறிமுதல், கோயில் குருக்கள் உள்ளிட்ட 2 பேர் கைது

நாகப்பட்டினம் அருகே நடராஜர், பஞ்சலோக அம்மன் உள்பட 9 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
x
சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார், நாகப்பட்டினம் அருகே பஞ்சலோக அம்மன் சிலையை 90 லட்ச ரூபாய்க்கும் நடராஜர் சிலையை 30 லட்ச ரூபாய்க்கும் விற்க முயற்சிகள் நடப்பதாக தகவல் கிடைத்ததாக குறிப்பிட்டார். இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிலைகளை வாங்குவது போல் நடித்து கோயில் குருக்கள் உள்ளிட்ட 2 பேரை கைது செய்ததாகவும் அவர் கூறினார். இந்த சிலைகளை வாங்க பேரம் பேசி சென்ற முக்கிய பிரமுகர்கள் குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு  போலீசார் விசாரித்து வருவதாகவும் டி.ஜி.பி. அபய்குமார் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்