இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் இந்திய பொருளாதாரம் மாறும் - துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி

இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் இந்திய பொருளாதாரம் மாறும் என, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
x
துக்ளக் இதழின் 50 வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, முழுமையாக இந்து மாநிலம் என்றால் அது தமிழகம் தான் என்றார். கலாச்சார ரீதியாக இந்துவாக  இருந்தாலும், அரசியல் ரீதியாக இங்கே இந்துக்கள் இல்லை என்றும், தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு மரியாதை குறைந்து விட்டது என்றும் அவர் கூறினார். லஞ்சத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை என்றும் குருமூர்த்தி குறிப்பிட்டார். 

நடிகர் ரஜினிகாந்த்துக்கு, அவரது பொறுப்புகள் என்ன என்பது தெரியும் என்று கூறிய குருமூர்த்தி,  ஊழல் குற்றச்சாட்டால் சிறை சென்று வந்துள்ள சிதம்பரம், தன்னை தியாகி போல காட்டிக் கொள்வதாக விமர்சித்தார். 


Next Story

மேலும் செய்திகள்