"துணை தலைவர் தேர்தலின் போது வாக்களிக்க விடாமல் கடத்தினர்" - திமுகவினர் மீது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் புகார்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த தம்மை, திமுகவினர் கடத்தி சென்று கொடுமைப்படுத்தியதாக, காங்கிரஸ் பெண் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.
x
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த தம்மை, திமுகவினர் கடத்தி சென்று கொடுமைப்படுத்தியதாக, காங்கிரஸ் பெண் கவுன்சிலர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். அன்னவாசல் ஒன்றிய குழுத் தலைவராக அதிமுகவை சேர்ந்த, ராமசாமி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். அப்போது,  வாக்களிக்காத காங்கிரஸ் பெண் கவுன்சிலர் ஜெயம் ஒன்றிய  அலுவலகத்திற்கு வந்து,  துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த தன்னை திமுகவினர் கடத்தி சென்று விட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்