சூடு பிடிக்கும் குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேருக்கும் மீண்டும் தேர்வு
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டவர்களிடம், கேள்வித்தாளை வழங்கி, டி.என்.பி.எஸ்.சி மறு தேர்வு நடத்தியுள்ளது.
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, சென்னை உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் 35 பேரிடம் தீவிர விசாரணனை நடத்தப்பட்டது. அப்போது தேர்வாணைய அதிகாரிகள் திடீரென்று, கணிதம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை வழங்கி, விடை எழுத சொல்லி வாங்கியுள்ளனர். அரசு பணிக்கு தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்கள் என அனைவருக்கும் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
Next Story