"பேசினாலே குற்றம் என்ற புது சட்டம் புகுத்தப்படுகிறது" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்

பேசினாலே குற்றம் என்ற புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
பேசினாலே குற்றம் என்ற புது சட்டம் புகுத்தப்படுகிறது - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்
x
பேசினாலே குற்றம் என்ற புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம் என்று கூறியுள்ளார். நெல்லை கண்ணன் பேசினாரே தவிர, என்ன தீய செயலை அவர் செய்தார்? என கேள்வி எழுப்பியுள்ளார். பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி நினைப்பவர்களை லண்டன் "ஹைட் பார்க் "பூங்காவிற்கு அனுப்ப வேண்டும் என்றும், அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்