உள்ளாட்சி தேர்தல் : நாளை வாக்கு எண்ணிக்கை

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
உள்ளாட்சி தேர்தல் : நாளை வாக்கு எண்ணிக்கை
x
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் 315 மையங்களில் கண்காணிப்பு கேமரா வசதிகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணி முதலே முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்