மெரினா கடற்கரையில் தயார் நிலையில் 3 முதலுதவி மையங்கள் - சென்னை மாநகராட்சி தகவல்

புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 3 முதலுதவி மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
மத்திய சுற்றுலா துறையின் உதவியுடன் சென்னை மாநகராட்சி சுகாதார துறை சார்பில் மெரினா உட்புற சாலையில் 3 முதலுதவி மையங்கள் உள்ளன. காந்தி சிலை, கண்ணகி சிலை, உழைப்பாளர் சிலை என 3 இடங்களில் இந்த முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினா கடற்கரைக்கு வருவோருக்கு திடீரென அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த குழு அமைக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த சூழலில் நாளை புத்தாண்டு பண்டிகைக்காக மெரினாவில் ஏராளமானோர் கூடுவார்கள். அவர்களுக்கு அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கு இந்த முதலுதவி மையங்களில் இருந்து சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்