குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : தேசியக் கொடியுடன் இஸ்லாமியர்கள் பேரணி
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னை ஆலந்தூரில், தேசியக் கொடியுடன் பேரணி நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னை ஆலந்தூரில், தேசியக் கொடியுடன் பேரணி நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி, நடந்த இந்தப் பேரணியில், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணியானது, ஆலந்தூர் எம்.கே.என். சாலை, ஆலந்தூர் மார்க்கெட், ரயில்வே நிலைய சாலை வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆசர்கானா மைதானத்தை அடைந்தது. அங்கு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story