வாக்குப்பெட்டி அறையில் 2 பேர் அத்துமீறி நுழைந்ததாக புகார் : சிறைப்பிடித்து எதிர்க்கட்சியினர் தர்ணா போராட்டம்
சீர்காழி அருகே வாக்குபெட்டி அறைக்குள் அத்துமீறி நுழைந்த 2 பேரை சிறைப்பிடித்து எதிர்க்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக 2 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இதை அறிந்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story