ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் மரணம்

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் மரணம்
x
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 90.  கடந்த 1954 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கிய அவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், சட்டம் சார்ந்த பல நூல்களை தமிழில் எழுதியுள்ளார். தேசிய சைபர் பாதுகாப்பு குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ள இவர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்