"பிரதமர் மோடியின் புகழ் இந்தியாவில் சரிந்து வருகிறது" - முகுல்வாஸ்னிக்
ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில மக்கள் பாஜக அரசை முற்றிலுமாக ஒதுக்கி விட்டதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் முகுல்வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில மக்கள் பாஜக அரசை முற்றிலுமாக ஒதுக்கி விட்டதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் முகுல்வாஸ்னிக் தெரிவித்துள்ளார். சென்னை விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் புகழ் இந்தியாவில் சரிந்து வருவதாகவும் , அது ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் மூலம் எதிரொலித்து இருப்பதாகவும் கூறினார். குடியுரிமை திருத்த சட்டம் இந்திய ஜனநாயகத்தை சீரழிப்பதாகவும் முகுல்வாஸ்னிக் குற்றம்சாட்டினார்.
Next Story