குடியுரிமை சட்டம் எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் , குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது.
நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, மதுரையில் மஹபூப்பாளையம் ஜின்னா திடலில் தர்னா போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் கருப்பு துணியால் கண்களை கட்டி கொண்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.
* கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அமைப்பு தலைவர்கள் , குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
* திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினரும் இஸ்லாமிய அமைப்புகளும் பங்கேற்றனர்.
Next Story