"விவசாயிகளுக்கு தலைப்பாகை அணிவித்து மரியாதை"
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே விவசாயிகளுக்கு தலைப்பாகை அணிவித்து இளைஞர்கள் மரியாதை செய்தனர்.
ஆயிலம்புதூர் விவசாயத்தை முதன்மையாக நம்பியுள்ள கிராமமாகும். இந்நிலையில், விவசாயம் மீது மோகம் கொண்ட இளைஞர்கள் சிலர், விவசாயத்தை ஊக்குவிக்க புதிய முயற்சியை மேற்கொண்டனர். கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி பச்சை நிற தலைப்பாகையை அவர்களுக்கு அணிவித்து இளைஞர்கள் மரியாதை செலுத்தினர். மண்வெட்டி, அரிவாள், மரக்கன்றுகளை அவர்களுக்கு வழங்கியதுடன், அறுசுவை விருந்தை இளைஞர்கள் பரிமாறினர்.
Next Story