குடகனாற்று தண்ணீரை முறைப்படுத்தி வழங்க கோரிக்கை - 5 கிராம மக்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்

குடகனாற்று தண்ணீரை முறைப்படுத்தி வழங்க கோரி திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையில் பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
x
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் குடகனாற்று தண்ணீர் வடிகால்கள் வழியாக சரியாக வருவதில்லை என்று கூறி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட அனுமந்தராயன் கோட்டையில் பொதுமக்கள் 3-வது நாளாக தொடர்ந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 5 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர்.  தங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை, போராட்டம் நீடிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்