உண்டியல் எண்ணும் பணியின் போது திருட்டு : 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உண்டியல் எண்ணும் பணியின் போது திருட்டு : 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது
x
திருத்தணி முருகன் கோயிலில்  உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உண்டியல் எண்ணும் பணி சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், உண்டியல் காணிக்கையை திருடிய சூர்ய பிரபை என்ற மூதாட்டி பிடிபட்டார். அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 16 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் சாவித்திரி மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஒருவரும் பிடிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்