குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள்
x
சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

நுங்கம்பாக்கம்

இதேபோல்,  சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு திராவிட கழக மாணவர்  அணி மற்றும் இளைஞர் அணியினர், போராட்டத்தில் ஈடுபபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், சாலையில் அமர்ந்தும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருவெறும்பூர்

திருச்சி திருவெறும்பூரில் எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  

திருப்பூர் 

திருப்பூரில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்ட அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்