களைகட்டும் உள்ளாட்சி தேர்தல் : கடலூரில் வேட்புமனு தாக்கலின் போதே வெற்றி கொண்டாட்டம்
உள்ளாட்சி தேர்தல் போட்டிக்கான வேட்பு மனு தாக்கல் களைகட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் வெற்றிபெற்றதை போல உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்
உள்ளாட்சி தேர்தல் போட்டிக்கான வேட்பு மனு தாக்கல் களைகட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் வெற்றிபெற்றதை போல உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபடும் சுவாரஸ்ய காட்சிகளும் அரங்கேறி வருகின்றன. கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் வந்து வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்கின்றனர். வேட்பு மனுவை தாக்கல் செய்து வெளியில் வரும் வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்தும், தோள்களில் தூக்கிச் சுமந்தும் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர் ஆதரவாளர்கள். இதனால், கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீர் பரபரப்புடன் தேர்தல் ருசிகர சம்பவங்கள் அரகேறி வருகின்றன.
Next Story