திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறை திறப்பு

திருவண்ணாமலை கோவில் தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் கருவறை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறை திறப்பு
x
திருவண்ணாமலை கோவில் தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் கருவறை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திருண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப திருவிழாவின் 3- ஆம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலின் கருவறை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் 16 கால் மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பூத வாகனத்தில் எழுந்தருளினர்.  பஞ்ச கற்பூற ஆரத்தி செய்யப்பட்டு மாட வீதியில் வலம் வந்தனர். ஊர்வலத்தில் பள்ளி மாணவிகள் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி  நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்