சிலை கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிலை கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
x
சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்த பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை தடை செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வழக்கு தொடர்பான எந்த ஒரு ஆவணங்களையும் அரசிடம் கொடுக்காமல் பொன் மாணிக்கவேல் இருந்துள்ளதாக குற்றம்சாட்டினார். அதேநேரம் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க வேண்டிய அக்கறை தமிழக அரசுக்கு இல்லை என பொன் மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் சாய் தீபக் தெரிவித்தார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என தமிழக அரசு தொடர்ந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு பொன்மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்