பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் பரிசு - அரசாணை வெளியீடு
பொங்கல் திருநாளில் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு, அரிசி உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதற்காக 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக பொங்கல் பரிசு வழங்கும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story