தலைமை செயலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புகைப்படத்துடன் நுழைவு சீட்டு வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
தலைமை செயலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை
x
சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புகைப்படத்துடன் நுழைவு சீட்டு வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கான சோதனை முயற்சியை போலீசார் தொடங்கியுள்ளனர். அதன்படி தலைமை செயலகம்  வரும் பொதுமக்களுக்கு  நுழைவு வாயிலில் செல்போனில் புகைப்படம்  எடுக்கப்பட்டு,  அதனை அச்சிட்டு புகைப்படத்துடன் கூடிய நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது. சோதனை அடிப்படையில் வழங்கப்படும் அந்த நுழைவுச்சீட்டு ஒருநாள் மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்