அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் காயம்
திண்டுக்கல் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் இருந்து தேனி சென்ற அரசு பேருந்து ஆத்தூர் அருகே செங்கட்டம்பட்டி என்ற இடத்தில் சாலையின் நடுவே திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story