பட்டப்பகலில் வீட்டில் புகுந்து திருட்டு : திருடனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த மக்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய திருடனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பட்டப்பகலில் வீட்டில் புகுந்து திருட்டு : திருடனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த மக்கள்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய திருடனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். வீட்டில் தனியாக இருந்த சிவக்குமார் என்பவர், மாடியில் இருந்த போது, கீழே வீட்டில் திருடன் புகுந்து, பீரோவை உடைக்க முயன்றுள்ளார். சத்தம் கேட்டு வந்து பார்த்த சிவக்குமார் திருடனை பார்த்து கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்