பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் பவானிசாகர் அணை ஏற்கனவே முழுகொள்ளவை எட்டியுள்ள நிலையில்  அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதி கிராமங்களான கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி, நஞ்சைபுளியம்பட்டி, அடசப்பாளையம், மேவாணி, உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவாய்துறையினர் தண்டோர மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். கரையோர பகுதி கிராம மக்கள் கரையோர பகுதியில் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் எனவும், பரிசல் இயக்க வேண்டாம் என்று வருவாய்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது 



Next Story

மேலும் செய்திகள்