தேசிய அளவில் வில்வித்தையில் கலக்கும் தமிழக மாணவி

தேசிய அளவில் வில்வித்தை போட்டியில் கலக்கி வரும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த 12 வயது மாணவி பூர்விகாவுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
தேசிய அளவில் வில்வித்தையில் கலக்கும் தமிழக மாணவி
x
தேசிய அளவில் வில்வித்தை போட்டியில் கலக்கி வரும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த 12 வயது மாணவி பூர்விகாவுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. பன்னீர்செல்வம்- கலையரசி தம்பதியரின் மகளான அவர், சிறுவயது முதலே வில்வித்தை போட்டிக்கு பயிற்சி பெற்று வருகிறார். தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் பூர்விகா, பல்வேறு பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகளை வென்று குவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் கரியால் நகரில் நடந்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில், பங்கேற்ற அவர், வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பியுள்ளார். இதற்காக பல்வேறு அமைப்பினரும் பாராட்டுகளை தெரிவிக்கும் நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே லட்சியம் என்கிறார் பூர்விகா. 

Next Story

மேலும் செய்திகள்