ரூ.1.75 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த சிறைக் கைதிகள் : நேர்மைக்கு குவிந்து வரும் பாராட்டு

புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை சிறைக்கைதிகள் மீண்டும் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ரூ.1.75 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த சிறைக் கைதிகள் : நேர்மைக்கு குவிந்து வரும் பாராட்டு
x
புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை சிறைக்கைதிகள் மீண்டும் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. புதுக்கோட்டை சிறையில் உள்ள கைதிகளில் 25க்கும்  மேற்பட்டோர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். தண்டனை கைதிகளில் நன்னடத்தை காரணமாக இவர்கள் வேலைக்கு பணியமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை பெட்ரோல் பங்க் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஜானகிராமன் என்பவர், தன் கைப்பையை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளார். இதையடுத்து  புஷ்பகுமார் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரும் பையை எடுத்து பார்த்தபோது அதில் பணம் இருப்பது தெரியவந்தது. சிறைக்காவலர்களிடம் பணத்தை ஒப்படைத்த கைதிகள், அதை ஜானகிராமனிடம் மீண்டும் ஒப்படைத்தனர். பையில் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் இருந்த நிலையில் அதை நேர்மையாக உரியவரிடம் ஒப்படைத்த கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகள் உட்பட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்