கோவையில் இளைஞரை கடத்தி கொல்ல முயற்சி : ஒருவர் கைது, கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு

கோவையில் இளைஞரை கடத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இளைஞரை கடத்தி கொல்ல முயற்சி : ஒருவர் கைது, கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு
x
கோவையில் இளைஞரை கடத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் முத்துசாமி வீதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கார்களை அடகு வைத்து தரும் தொழில் செய்து வந்த இவரிடம் சதாம் உசேன் என்பவர் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை முற்றியதில் ஆத்திரமடைந்த சதாம் உசேன், நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை காரில் கடத்தி சென்றுள்ளார். பின்னர் சதாமின் வீட்டில் அடைத்து வைத்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மணிகண்டனை மீட்ட உறவினர்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷானவாஸ் என்பவரை கைது செய்தனர். மேலும் சதாம் உசேன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்