ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க கருவி கண்டுபிடித்த இளைஞன்

ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க, அறிவியல் மாணவர் ஒருவர் குறைந்த செலவில் கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
x
திருச்சி மணப்பாறையில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இந்த துயர சம்பவம்  உலகம் முழுதுவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ரெங்கசாமிபுரத்தை சேர்ந்த அறிவியல் மாணவர் முருகன் என்பவர், ஆழ்துளை கிணற்றிலிருந்து எளிய முறையில் குழந்தையை மீட்கும் கருவியை வடிவமைத்துள்ளார். செய்முறை விளக்கத்திற்காக பொம்மையை குழிக்குள் இறக்கி கருவி மூலம் தூக்கி அசத்தினார். இதற்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்