மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை : பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஒரே இரவில் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 4 அடி அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரே இரவில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அணையின் முழு கொள்ளளவு 47 அடியாக உள்ள நிலையில் , அணையின் நீர் மட்டம் தற்போது 39 அடியை எட்டியுள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story