மணப்பாறை : ஆபத்தான வகையில் ஆழ்துளை கிணறுகள் - அதிகாரிகள் அலட்சியம் என மக்கள் குற்றச்சாட்டு

திருச்சி மணப்பாறை பகுதியில், ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மணப்பாறை : ஆபத்தான வகையில் ஆழ்துளை கிணறுகள் - அதிகாரிகள் அலட்சியம் என மக்கள் குற்றச்சாட்டு
x
நடுக்காட்டுப்பட்டியில், சிறுவன் சுஜித் உயிரிழந்த நிலையில், ராஜிவ்நகரில் குழந்தைகள் நிறைந்த இடத்தில் சாலையோரத்திலேயே அரசுக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு ஒன்று உள்ளது. திறந்த வெளியில் இருந்த போர்வெல்லில் தற்போது சாக்கு வைத்து கட்டி வைத்துள்ளனர். அந்த வழியாக செல்லும் குழந்தைகள் தெரியாமல் ஆழ்குழாயில் தவறி விழும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த ஆழ்குழாய் கிணற்றை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி மணப்பாறை பகுதியில் மூடப்படாமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை உடனே மூட வேண்டும் என்றும், அதிகாரிகள் இனியும் அலட்சியாக இருக்க கூடாது என்ற கோரிக்கையும் மேலோங்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்