பள்ளி பேருந்து மோதி பெண் உயிரிழப்பு : மூடப்படாத பாதாள சாக்கடை குழியால் நேர்ந்த சோகம்
காரைக்குடியில் தனியார் பள்ளி பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடியில் தனியார் பள்ளி பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரின் மனைவி ரேவதி. இருவரும் கட்டட வேலை செய்து வந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது சாலையின் ஓரம் பாதாள சாக்கடைக்கான குழி மூடப்படாமல் இருந்ததால் திடீரென வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது பின்னால் வந்த பேருந்து அவர்களின் வாகனத்தின் மீது மோதியதில் ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story